இம்முறை தொடக்கம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர கணக்கியல் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நிரல்படுத்த முடியாத கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை தொடக்கம் நடைபெறவிருக்கும் அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.