குருநாகல் நகர சபை ஊழியர்கள் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
$ads={2}
இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குருநாகல், வில்கொடை பிரதேசம் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
குருநாகல் - மல்லவபிட்டிய பகுதியில் இயங்கும் பல மீன் கடைகளின் 08 ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த மீன் விற்பனை நிலையங்களின் 58 ஊழியர்கள் PCR பரிசோதனை அறிக்கைகளின்படி, 08 ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)