கொழும்பை விட்டு வெளியேறியவர்களுக்கு நடக்கப்போவது இது தான் - சமூகவலைதளங்களின் உதவியுடன் ஒவ்வொருவரும் இனங்காணப்படுவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பை விட்டு வெளியேறியவர்களுக்கு நடக்கப்போவது இது தான் - சமூகவலைதளங்களின் உதவியுடன் ஒவ்வொருவரும் இனங்காணப்படுவர்!


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்திலிருந்து பிற மாகாணங்களுக்கு சென்றதாக சமூக ஊடகங்களில்பதிவிட்டவர்களைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு விதித்த பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் சிறப்புஅறிவிப்பையும் வெளியிட்டார்.

கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், மேல் மாகாணத்தில் 112 பொலிஸ்பிரிவுகளும், கொல்லுப்பிட்டிய் பகுதியில் 05 பொலிஸ் பிரிவுகளிலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்றவர்கள் அந்தந்த இடங்களில் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

அவ்வாறு வெளியேறியவர்கள் தற்போது ஹோட்டல், சுற்றுலா ரிசார்ட் அல்லது ஒரு வீட்டில் இருப்பார்களாயின், அவர்கள் அங்கேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேல் மாகாணத்திற்கு தனிமைப்படுத்தப்படாமல் திரும்பி வருபவர்கள் ஒரு சிறப்பு முறையின்படி அடையாளம் காணப்படுவார்கள் என்றும்அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.