
தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள எந்தவொரு தனிநபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதான தொற்று நோயியல் நிபுணரான சுதத் சமரவீர இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாற்றமடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் மாத்திரமே தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.