கொரொனா வைரஸ் பரவல் காரணமாக வாடிக்கையாளர்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் (13) மீள் அறிவித்தல் வரை இவ்வாறு பொதுமக்களின் வருகை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டீ டயஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், ஓய்வூதியத் திணைக்களத்தில் சேவைகளை பெறவேண்டி இருப்பின் 1970 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.