மூன்று பிள்ளைகளின் தாய் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று பிள்ளைகளின் தாய் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு!

ஹொரவபொத்தானை பகுதியில் தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனமொன்றிற்குள் வைத்து பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (26) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது கணவருடன் குறித்த கடன் வழங்கும் நிதி நிறுவனத்திற்கு முச்சக்கரவண்டியில் வருகை தந்து, கணவருக்கு முகக்கவசம் இல்லாததினால் தனது பிள்ளையை வைத்துக்கொண்டு  முன்னால் நின்றபோது, இனந்தெரியாத நபரொருவர் நிதி நிறுவனத்திற்குள் புகுந்து குறித்த பெண் மீது கத்தியால் குத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

$ads={2}

மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹொரவபொத்தானை, 122 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட லேவாசபிரிவெவ பியதாசகே தம்மிகா பிரியதர்ஷினி (34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவபொத்தானை பொலிசார் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.