பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் நாளைய தினமும் பாராளுமன்றம் மூடப்படும் என பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
$ads={2}
சுத்திகரிப்பு பணியாளர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கடமையாற்றிய காவல்துறைப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகிருந்தது.
எவ்வாறெனினும், இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.