உடனடியாக அமுலாகும் சட்டம் - மீறினால் சிறைவாசம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடனடியாக அமுலாகும் சட்டம் - மீறினால் சிறைவாசம்!


இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றத்தினால் முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் சுகாதார தன்மையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீரமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பிரதேசங்களில் சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட சட்டங்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கும், ஒரு மீற்றர் தூரத்தை பிற்பற்றாதவர்களுக்கும், சில பிரதேசங்களுக்கு செல்லும் போது காய்ச்சல் பரிசோதிக்காதவர்களுக்கும் எதிராக சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படும்.

அதற்கமைய சுகாதார பணிப்பாளரினால் நோய் தொற்றும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் இந்த சுகாதார சட்ட திட்டங்களை மீறும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கு குறையாத அபராதம் மற்றும் 6 மாத தண்டனை வழங்க நீதிமன்றத்தினால் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.