பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு.அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா அம்மான் இன்று (13) அலரிமாளிகையில் வைத்து தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30,000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார்.
$ads={2}
இதற்கமைய பிரதமர் கருணா அம்மானுக்கு இப்பதவியினை வழங்கி வைத்தமை குறித்து அவரின் ஆதரவாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர்.