நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு!


அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.


இன்று தம்முடைய அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்து கொண்ட பின்பு அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று (27) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,


$ads={2}


இன்று நாட்டில் கொரோனா கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மலையக பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் பாரிய அளவில் தொற்று அதிகரித்து வருகின்றது.


ஒரு சில நகரங்களை மாத்திரம் மூடுவதனால் இதனை கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதாவது மார்ச் மாதம் அளவில் மிக குறைவான கொரோனா தொற்றாளர்களே இலங்கையில் இருந்தனர். இதன்போது முழு நாட்டையும் முடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.