புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பொதுமக்கள் மத்தியில் இருந்து பரிந்துரைகளைப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னே இதனை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வல்லுநர்கள் குழுவுக்கு நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.
தமிழ் - சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் A4 தாளில் தட்டச்சு செய்யப்பட்ட சமர்ப்பிப்புகளை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பமுடியும் என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இயல்பு, அடிப்படை உரிமைகள், மொழி, அரசக்கொள்கையின் வழி நடத்தும் கோட்பாடுகள், ஜனாதிபதி, அமைச்சர்கள் அமைச்சரவை, பொது சேவை, சட்டமன்றம், வாக்கெடுப்பு மற்றும் வாக்கெடுப்பு உள்ளிட்ட தேர்தல்கள் அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறை, பொதுநிதி, பொதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலேயே பொதுமக்களிடம் இருந்து புதிய அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தமது பரிந்துரைகளை அனுப்பவேண்டிய முகவரி:
Room No. 32,
(Block 02) BMICH,
Bauddhaloka Mawatha,
Colombo 07.
மின்னஞ்சல் முகவரி:
expertscommpublic@yahoo.com