இலங்கையில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியான அனைவரும் ஏற்கனவே வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இதுவரையில் 276 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
$ads={2}
மொத்தமாக 7,429 கொரோனா தொற்றாளிகள் இதுவரையில் பதிவாகியுள்ளனர்.
மினுவன்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொத்தணிகளில் மட்டும், இதுவரையில் 3,958 தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.