மின்னல் தாக்கி அம்பாறையில் விவசாய தம்பதியினர் பரிதாபகரமாக பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்னல் தாக்கி அம்பாறையில் விவசாய தம்பதியினர் பரிதாபகரமாக பலி!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடியுடன் கூடிய மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (30) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவர். 

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடி வருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாயத்தினை ஜீவணோபாயமாக கொண்ட குறித்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

$ads={2}

மேலும், அவர்களின் சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை 6.00 மணி முதல் அந்த மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.