இலங்கையில் பரவலடைந்து வரும் புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், அந்த நேரத்தில் நாட்டில் பரவி வந்த கோவிட் வைரஸ் குழுவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
$ads={2}
தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் மிகக் குறுகிய காலத்தில் ஒருவருக்கு ஒருவர் பரவக்கூடும் என்பது அடையாளம்காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ்கள் குழு B142 என்ற துணை வகையைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது எந்த நாட்டுடன் தொடர்புடையது என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் நிலீகா மலாவிகே தெரிவித்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.