பாடசாலைகளில் பணியாற்றும் பதில் அதிபர்களுக்கு தரம் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளில் பணியாற்றும் பதில் அதிபர்களுக்கு தரம் உயர்வு!


அதிபர் சேவைக்கு இணையாக பணியாற்றும் கடமை நிறைவேற்று பதில் அதிபர்களின் சேவை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தரங்களை உயர்த்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடக பதில் அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்கள் கல்வி அமைச்சுக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.


ஊவா மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் ஊவா மாகாண சபையில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் முஸம்மில் குறித்த ஆலோசனையை முன்வைத்தார்.


சுமார் 166 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை எனவும்,  சில பாடசாலைகளில் பதில் அதிபர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ், இவ்வாறான நிர்வாக பிரச்சினைகளைத் தீர்க்க தமது அமைச்சு அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


இதன்போது குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, நல்ல பெறுபேறுகளை வெளியிடும் பதில் அதிபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் முஸம்மில் மேற்குறித்த ஆலோசனையைக் கல்வி அமைச்சுக்கு முன்வைத்தார்.


இதன்போது மாகாண சபை அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் காணப்படும் அதிபர் ஆசிரியர் பற்றாட்டக்குறை, அடிப்படை வசதிகள், முன்பள்ளி பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளை நேரடியாக அமைச்சரைத் தெளிவு படுத்தினர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.