காலி – அம்பலங்கொட பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்குவந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி குறித்த வைத்தியசாலை மற்றும் ஆய்வுக்கூடம் மூடப்பட்டுள்ளதுடன், தொற்றுநீக்கலுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.