இலங்கையில் அண்மையில் கொரோனா வைரஸ் தீவிரமகாக பரவியதன் காரணமாக எதிர்காலத்தில் இதுபோன்ற பரவலை இலகுவாக கண்டறிய தாம் பயணிக்கும் இடங்களின் பதிவுகளை பராமரிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை தங்கள் மொபைல் போன்களிலோ அல்லது நோட்புக்கிலோ இதனை பராமரிக்குமாறு எஸ்.டி.ஐ.ஜி அஜித் ரோஹன கேட்டுக்கொண்டார்.
தேவை ஏற்படும் போது எளிதில் தமது பயண விபரங்களை கண்டறிய முடியும் என்றார்.
மேலும், முச்சக்கர வண்டி மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்களை தாங்கள் வாடகைக்கு எடுக்கும் பயணிகளின் பதிவையும் பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.