கடந்த வாரம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த விவாதத்தின் போது பங்கெடுத்த இரண்டாவது நாடாளுமன்ற பத்திரிகையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிங்கள மொழி நாளிதழில் ஒன்றில் சேவை புரியும் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவரே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என தேசிய கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
$ads={2}
'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் நாடாளுமன்ற நிருபர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, கடந்த அக்டோபர் 21 மற்றும் 22 திகதிகளில் நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சுகாதார அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கிரியிருந்தனர்.