சஹ்ரானின் மனைவி உட்பட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரானின் மனைவி உட்பட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மேலும் 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த 7 பேருக்கும் இதுவரை விதிக்கப்பட்டருந்த தடுப்புக்காவல் உத்தரவு நேற்றுடன் (22) நிறைவடைந்தது.

இந்நிலையில், நேற்று இந்த 07 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

$ads={2}

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு நேற்று மாலை சஹ்ரானின் மனைவி அழைத்து வரப்பட்டார்.

அத்துடன் இன்றைய தினம் ஆணைக்குழுவில் அவரை மீண்டும் முன்னிலைப்படுத்துமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.