தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மேலும் 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த 7 பேருக்கும் இதுவரை விதிக்கப்பட்டருந்த தடுப்புக்காவல் உத்தரவு நேற்றுடன் (22) நிறைவடைந்தது.
இந்நிலையில், நேற்று இந்த 07 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு நேற்று மாலை சஹ்ரானின் மனைவி அழைத்து வரப்பட்டார்.
அத்துடன் இன்றைய தினம் ஆணைக்குழுவில் அவரை மீண்டும் முன்னிலைப்படுத்துமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.