20ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு தான் ஏன் ஆதரவளித்தேன்? முஷர்ரஃப் எம்.பி விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு தான் ஏன் ஆதரவளித்தேன்? முஷர்ரஃப் எம்.பி விளக்கம்!

இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

"நான் எதிர்காலத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக பார்ப்பதில் அக மகிழ்ச்சியடைகிறேன்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதானது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் ஒருபொழுதும் எந்தவித தீங்கும் விளைவிக்காது என நான் திடமாக நம்பியதால் 20ஆம் திருத்தத்தில் இருந்த இரட்டை பிரஜாவுரிமை பிரிவிற்கு தனது தனிப்பட்ட ஆதரவினை தெரிவித்திருந்தேன். 

$ads={2}

அமைச்சர்களான  உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தின் சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வருவதை எதிர்த்தனர் என்பது நாமறிந்த உண்மை. ஏனெனில் இரட்டை பிரஜாவுரிமையுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தால் இனவாத மற்றும் மதவாதிகளுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒருபொழுதும் ஆதரவாக செயற்படமாட்டார் என்பதனால் அவர்கள் அதனை எதிர்த்தனர். 

இனவாதம் மற்றும் மதவாதத்ததை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் இந்த இனவாத அரசியல் வாதிகளுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசம் ஒரு விசமாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை என்ற பிரிவை அவர்கள் எதிர்த்ததற்கான காரணம் அதுவேயகும். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது தொலைநோக்குள்ள தலைமைத்துவ குணங்களால் முஸ்லிம் சமூகத்தால் இன்னும் நேசிக்கப்படுகிற ஒருவராக காணப்படுகின்றார். 

$ads={2}

பாராளுமன்றத்தில் அவர் இருப்பது நிச்சயமாக சமூகங்களிடையே குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் நல்லிணக்கம், சமாதானம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கான வலுவான பாதையை வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  மனித நேயமுள்ள ஒரு மனிதர். 2010-2015 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் போது அவரது மனித நேயம் இனவாதமற்ற தன்மை என்பனவற்றை அவர் பல நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய திட.டங்களால் அவற்றை நிரூபித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ 20ஆவது திருத்தம் மூலம் நாடளுமன்றத்திற்கு வரப்போவதனை உணர்ந்த அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அவரின் வருகையை மிகக் கடுமையாக எதிர்த்தனர். 

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 இல் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இந்த விதி (இரட்டை பிரஜாவுரிமை) சேர்க்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்களை திருப்திப்படுத்த அளித்த வாக்குறுதியின் பின்னர் அவர்கள் நேற்று (22) இந்த பிரிவுக்கு வாக்களிக்க முடிவு செய்தனர். 

புதிய அரசியலமைப்பு 2021 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனவாத மற்றும் மதவாதத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த விதிமுறையை (இரட்டை குடியுரிமை விதி) உண்மையிலேயே எதிர்த்தனர், ஆனால் இறுதியாக அவர்கள் அதை எதிர்க்க எந்த வழியையும் இல்லாமல் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியிருந்தது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு ஒரு எம்.பி. அல்லது அமைச்சராக வருகிறார் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது, இந்த அரசாங்கத்தை தனது யுக்தியைப்பயன்படுத்தி கொண்டு வந்தவர் அவர் என்பதால் அவரின் வருகைக்கு பின்னர் பாராளுமன்றம் சுமூகமாக நகர முடியும் என நான் நம்புகிறேன்.  

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ‌,  விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போல் இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதியொருவர் அல்ல. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் தான் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்பன உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு திட்டங்களாலும் இவ் இரண்டு மாகாணங்களும் பல்துறை அபிவிருத்தி கண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

$ads={2}

எனவே  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதை தடுக்கும் நோக்கில் எதிர்ப்பு வெளியிடப்பட்ட அந்த பிரிவிற்கு இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதிகளுக்கு ஒரு சாட்டையடியாகவும் இன நல்லிணகலகத்தினை வலுவூட்ட பாராளுமன்றத்தினுள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வருவது மிகவும் அவசியமாகும் என்பதனை உணர்ந்த்தன் அடிப்படையில் தான் நான் 20 ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை உடைய இலங்கைப் பிரஜை  பாராளுமன்றத்திற்கு வர வழிசெய்யும் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினேன்." என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.