முஹம்மது நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புக்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அடுத்த மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்க பெறுமானங்களை மதித்து குரோதங்களை மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.
முன்னொருபோதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்து உலகெங்கிலும் பரவி வரும் கோவிட் 19 நோய் தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பாரிய சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது.
அத்தகைய ஒரு கால சூழ்நிலையில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முதலிடம் அளித்து வாழ்வது எமக்கு உள அமைதியை பெற்றுத்தரும். அதேபோன்று பரஸ்பர நலன் பேணல், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் பொது நலனை அடைந்து கொள்வதற்காக நபிகளாரின் வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட நன்னெறிகளை சமூக மயப்படுத்த வேண்டியுள்ளது.
நபிகளாரின் பிறந்தநாளை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் காட்டித்தந்த பெருமானங்களுக்கு ஏற்ப வாழ்ந்து அனைத்து வகையான தீவிரவாதங் களையும் தோற்கடித்து சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான திடவுறுதியுடன் இஸ்லாமியர்கள் ஒன்று படுவார்கள் என நான் நம்புகின்றேன்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மிலாதுந் நபி தினத்திற்கு எனது பிராத்தனைகள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
2020 அக்டோபர் 29