கொரோனா அச்சம் - வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய தம்பதிகள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா அச்சம் - வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய தம்பதிகள்


கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கஹவத்த – வெல்லந்தர பகுதியைச் சேர்ந்த பெண் , கொரோனா சந்தேகத்தில் கடந்த 27ஆம் திகதி கஹவத்த தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது அவருடைய கணவரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் இறக்குவான வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


$ads={2}

இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் கூறாமல் இவ்விருவரும் தப்பிச்சென்று அட்டகலன்பன்ன பனாவல பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்கள் குறித்த தகவல்களை திரட்டியதோடு தப்பிச்சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.