குருநாகல் வர்த்தகர்களுக்கு விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகல் வர்த்தகர்களுக்கு விசேட அறிவித்தல்!

குருநாகல் நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு குருநாகல் நகர சபைத் தலைவர் துஷார சஜ்ஜீவ விதாரண தெரிவித்துள்ளார்.

குருநாகல் சபை ஊழியர்கள் ஆறுபேர் உள்ளிட்ட இரண்டு மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர சபை ஊடாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலேயே, அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

$ads={2}

குருநாகல் வில்கொடை பகுதியில்,  தொழிலாளர் குடியிறுப்பில் வசிக்கும் 17 குருநாகல் நகர சபை ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குருநாகல் வில்கொட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரொனாவை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.