கொழும்பு 12 – ஆமர்வீதி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, கொழும்பு 12 – ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.