பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்! ஆதிவாசிகளின் தலைவர் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்! ஆதிவாசிகளின் தலைவர் அறிவிப்பு!


நாட்டுக்குள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த வசதிகளை கொண்ட வேடுவ மக்களின் பாதுகாப்பு கருதி, இன்று (25) முதல் தம்பான ஆதிவாசிகள் கிராமத்தை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்காக திறப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவாரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.


தம்பானயில் இன்று (25) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை கூறியுள்ளார்.


$ads={2}


அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்கள் இன்றி, வேடுவ மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி, ஆதிவாசிகளின் அருங்காட்சியகம் உட்பட ஆதிவாசிகளின் கிராமத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.