![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hHnfWLW_LnBY_jdufxp_UO_aOUZ0eCAInYoMMssfGGOdBOhoSLrg6QjIXeF29GUPvfVDJ2BCTG29htstTtcn-QCunFLzL_HjoIyzlS-AGbVCydEaBMHMknUDq9vyzNrvT12b4qEgAQU/s16000/original.jpg)
கொரோனா தொற்றுக்கு இலக்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உடல்நிலை தொடர்பில் அடுத்துவரும் 48 மணிநேரம் முக்கியமான கட்டம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக அதிபர் டிரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை டொனால்ட் டிரம்புக்கு மூக்சு திணறல் போன்ற பிரச்சனை இல்லை. அவருக்கு ஒக்சிஜன் உதவி தேவைப்படவில்லை. ஆனால், மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று இரவு கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலையில் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான கட்டம் எனவும், அவரது உடல் நிலை முழுவதுவமாக குணமடையும் என்பதை தற்போது கூற இயலாது என வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.