PHOTOS : பேரூந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 40 நபர்கள் காயம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : பேரூந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 40 நபர்கள் காயம்!!!


டயகம பகுதியில் இருந்து போடைஸ் ஊடாக பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் - டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 40 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02) காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த பயணிகள் 1990 நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாகவும் பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த 40 பேரில் 24 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

விபத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.