கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணுடன் 400 பேர் ஒன்றாக பணி புரிந்துள்ளனர் - பீதியில் மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணுடன் 400 பேர் ஒன்றாக பணி புரிந்துள்ளனர் - பீதியில் மக்கள்!


கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக இன்று காலை உறுதி செய்யப்பட்ட பெண் தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார பிரிவு வெளியிட்டுள்ளது.

திலுவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் மினுவங்கொட பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.

அவர் பணியாற்றிய குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் 400 ஊழியர்கள் வேலை செய்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 400 பேரையும் அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று தெளிவுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

அவருடன் பேருந்தில் பயணித்த 40 ஊழியர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த பெண்ணின் கணவர், பிள்ளைகள் இருவரும் மற்றும் அவரது தந்தையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய கட்டடம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மூன்று மாதங்களின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளி இன்று காலை அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.