இன்றைய தினம் கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட அங்கவீனமான 19 வயதுடைய மொஹமட் மின்ஹாஜ் என்பவருடைய ஜனாஸா இன்று (27) தகனம் செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இன்று கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் 19 வயது அங்கவீனமான மொஹமட் மின்ஹாஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது புதிராக உள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னர் அவருடைய ஜனாஸா தகனம் செய்யப்பட்டு விட்டது என்றார்.
மேலும், மரணித்த பின் அவருக்கும் கொரோனா இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னுமொரு PCR பரிசோதனை எடுக்குமாறு குடும்பம் போராடியது. யார் சொல்லியும், எவர் பேசியும் பிரயோசனமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது PCR மாத்திரம் எதிர்மறையாக என்று சொல்லி, முதலாவதை தவறென ஒத்துக்கொள்ளும் மனப்பான்மையுள்ளவர்களா அவர்கள்? என்ற வேதனையில் குடும்பம் 'பெட்டி' கொண்டு வர முடியாது என அடம்பிடித்த நிலையில் இருந்தனர்.