கொரோனா தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை!

கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பரவலாக அடுத்தாண்டு நடுப்பகுதி வரையான காலத்தினை எடுத்துக்கொள்ளும் என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை அடுத்த ஆண்டின் இடைப்பகுதியில்தான் உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கிறது. தடுப்பு மருந்துகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பே தற்போது முக்கியம். கொரோனா தடுப்பு மருந்து குறித்து இன்னும் முழுமையான சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.


$ads={1}

தடுப்பூசிக்கான மூன்றாவது கட்டத்திற்கு அதிக நேரம் எடுக்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசி எவ்வளவு செயல்திறன் கொண்டது என்பதை நாம் காண வேண்டும். மேலும் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் நாம் காண வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கொரோனா முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.