Video: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரையின் போது கல்வீச்சு தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Video: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரையின் போது கல்வீச்சு தாக்குதல்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்மலானையில் நேற்று (29) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“நான் எந்தவொரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள தயார், யாருக்கும் பயப்படபோவதில்லை. கல்வீசி தாக்குதல் மேற்கொண்டாலும் நான் இந்த இடத்தினை விட்டு செல்லப்போவதில்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.