கொழும்பில் பிரபல பாடசாலையின் உதவி அதிபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் பிரபல பாடசாலையின் உதவி அதிபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது!

மேலதிக வகுப்புகளை நடத்துதல் என்ற போர்வையில் 15 வயது சிறுவனுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் உதவி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பாணந்துறை பொலிஸார் கடந்த புதன்கிழமை (09) சந்தேக நபரை கைது செய்தனர்.


பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் நடத்திய விசாரணையை தொடர்ந்து உப அதிபர் கைது செய்யப்பட்டார்.


உதவி அதிபரின் வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவன் சிங்கள பாடத்தில் பலவீனமாக இருந்ததால், உப அதிபரின் சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார்.


ஒவ்வொரு சனிக்கிழமையும் உதவி அதிபரின் இல்லத்தில் தனியாக வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வகுப்புகளின் போது, கடந்த ஜூலை மாதம் பல சந்தர்ப்பங்களில் சிறுவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.


ஒவ்வொரு நாளும் வகுப்பிற்கு வருமாறு உப அதிபர் தொந்தரவு தந்ததாக சிறுவனின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஓகஸ்ட் மாதம் சிறுவன் குறித்த ஆசிரியரின் தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கான காரணத்தை பெற்றோர் விசாரித்தபோது, சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.


இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாயார், தனது சகோதரனுடன் உப அதிபரின் வீடு தேடி சென்று  உப அதிபரை தாக்கியுள்ளார்.


அவர்களை உப அதிபரின் மனைவி சமரசம் செய்து வீட்டிற்குள் அழைத்து சென்று விடயத்தை வெளியில் விடாமல் இருங்கள் என கூறி ஒரு லட்சம் ரூபா வழங்கியுள்ளார்.


உப அதிபர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.