பல்கலைக்கழகங்களில் இனி அரச புலனாய்வு சேவை தலையீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழகங்களில் இனி அரச புலனாய்வு சேவை தலையீடு!


பல்கலைக்கழகங்களில் அதிகரித்துவரும் பகிடிவதையை தடுக்கும் நோக்கில் அரச புலனாய்வு அதிகாரிகளை ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்கு அரச புலனாய்வுச் சேவை மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளின் உதவியைப் பெற்றுத் தருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்தாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.


பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக 08 பேர் கொண்டகுழு கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே பாதுகாப்பு அமைச்சின் உதவியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.


குற்றம் ஏதும் நிகழ்ந்தால் அல்லது நிர்வாகம் அழைப்பு விடுத்தாலே தவிர வழக்கமாக பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பொலிசார் நுழைவதில்லை.


இந்நிலையிலேயே, பகிடிவதையை ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட போது அரச புலனாய்வுச் சேவையின் உதவியை கோருவதற்கு அவர்கள் இணக்கத்தை தெரிவித்தனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


இதன்படி, பல்கலைக்கழக பாதுகாவலர்களுடன் புலனாய்வு சேவைகள் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் பகிடிவதைகளில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு பொலிசாருக்கு உதவிகளை வழங்கும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.