ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்று - ஹோட்டல் ஊழியர்கள் தனிமைபடுத்தலில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்று - ஹோட்டல் ஊழியர்கள் தனிமைபடுத்தலில்


மாத்தறை - பொல்ஹேன பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

இந்த நபர் உட்பட ரஷ்ய நாட்டவர்கள் 15 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.


$ads={2}

அவர்கள் இன்றைய தினம் ரஷ்யா திரும்பவிருந்த நிலையில் மாத்தறை நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்றைய நபர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த ரஷ்ய நாட்டவர்கள் குழுவில் மூவர் மாத்தறை வர்த்தக நிலையங்களுக்கு நேற்றைய தினம் முச்சக்கர வண்டியில் வருகைத்தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ரஷ்ய நாட்டவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த ஹோட்டலின் 23 பேர் தனது வீடுகளுக்கு சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் குடும்பத்தினர் உட்பட ஊழியர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளமை தொடர்பில் தகவல் சேகரித்து வருவதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.