அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் தோற்கடிக்க SJB தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் தோற்கடிக்க SJB தீர்மானம்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் வரைவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தரைமட்ட பிரச்சாரத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

"நாங்கள் அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வரும் நாட்களில் உச்ச நீதிமன்றத்தின் முன் சென்று சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம்."

இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த திர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன் அது குறித்த வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக குறித்த சட்டமூலமானது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.