கொரோனாவினால் பாதித்த இளம் பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினால் பாதித்த இளம் பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர்!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா எனும் பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்பின் ஆறன்முளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெண் தனக்கு நிகழ்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான நௌபல் எனும் நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அவரை பணி இடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.