நான் அப்பாவி என்று எனது மனசாட்சிக்கு தெரியும்; நான் செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டேன்! -பிரேமலால் ஜயசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் அப்பாவி என்று எனது மனசாட்சிக்கு தெரியும்; நான் செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டேன்! -பிரேமலால் ஜயசேகர


நாடாளுமன்றத்தில் இன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (08) ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


நல்லாட்சி அரசாங்கம் என்னை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவதற்காக என்மீது சுமத்திய போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான் தண்டிக்கப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.


நான் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். நான் அப்பாவி என்பது எனது மனச்சாட்சிக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் நான் கறைபடியாத அரசியலில் ஈடுபட்டவன் எனது அரசியல் வாழ்க்கையில் நான் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


நல்லாட்சி அரசாங்கமும் அதன் நீதியமைச்சரும் CIDயினருமே நான் சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.