கனரக (heavy vehicle) வாகன உரிமம் பெறுவோருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கனரக (heavy vehicle) வாகன உரிமம் பெறுவோருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

கனரக வாகனம் அல்லது வணிக வாகன சாரதி உரிமங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மது அல்லது மது அல்லாத போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய சிறப்பு சிறுநீர் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர் ஏதேனும் ஆல்கஹால் உட்கொண்டுள்ளாரா என்பதை அறிய சோதனைச் சாவடிகள் அல்லது சாலைத் தடைகளில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை ஓட்டுபவர்கள் மது அல்லாத போதைப்பொருகளை பயன்படுத்துவதாக மக்களிடமிருந்து எங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஒரு நபர் மது அல்லாத போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் சாதாரண மது சோதனைகள் வெளிப்படுத்தாது. எனவே, சிறப்பு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும், ”என்று அமைச்சர் கூறினார்.

புதிய சோதனையானது, நபர் எந்தவொரு மது அல்லாத போதைப்பொருளையும் உட்கொண்டுள்ளாரா என்பது பரிசோதனையின் போது மட்டுமல்ல, முந்தைய மாதங்களிலும் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் காட்டும்.

இதற்கிடையில், கனரக வாகனம் அல்லது வணிக வாகன வாரதி உரிமங்களைப் பெறுவதற்கான செலவைக் குறைக்க போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.