க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27ஆம் திகதி வரை நடைபெறும். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படும். க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் பெப்ரவரி 01 முதல் மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகும்.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – ஒக்டோபர் 11ஆம் திகதி

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் – ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06 வரை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – ஜனவரி 18ஆம் திகதி முதல்; ஜனவரி 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதற்கேற்ப ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 08ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்

மூன்றாம் தவணை நவம்பர் மாதம் 09ஆம் திகதி முதல் டிசம்பர் 23ஆம் திகதி வரையும், வருட இறுதி விடுமுறை டிசம்பர் 24 முதல் 2021 ஜனவரி 04ஆம் திகதி வரை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.