வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டு உரிமையாளருக்கு பங்கம் விளைவிக்க கூடாது! -எல்லாவல மெத்தானந்த தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டு உரிமையாளருக்கு பங்கம் விளைவிக்க கூடாது! -எல்லாவல மெத்தானந்த தேரர்


இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” எனவும் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மெத்தானந்த தேரர் அறிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“விக்கினேஸ்வரனின் இந்த உரை அப்பட்டமான பொய். இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

தமிழ் மக்களுக்கு இங்கு வாழும் உரிமை இருக்கின்றது. வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.” என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.