“கலர் கலர்” ஹெரோயின் பக்கட்டுக்கள் - CID யினரால் கண்டுபிடிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“கலர் கலர்” ஹெரோயின் பக்கட்டுக்கள் - CID யினரால் கண்டுபிடிப்பு


இலங்கையில் ஹெரோயின் பக்கட்களை பகிர்வதற்காக புதிய நிற முறை ஒன்று பயன்படுத்துவதாக குற்ற விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர்கள், ஹெரோயின் பக்கட்களை நாடு முழுவதும் பகிர்வதற்காக இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.

குறித்த ஹெரோயின் பக்கட் யாருடையது என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக நகரத்திற்கு நகரம் பல்வேறு நிறங்கள் பயன்படுத்தி அவற்றினை விற்பனை செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் திலீப பீரிஸ், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள பொடி லெசி உட்பட போதை பொருள் விற்பனையாளர்கள் தங்கள் ஆதரவாளர்களை ஈடுபடுத்தி குறித்த ஹெரோயின் பக்கட்களுக்கு பல்வேறு நிறம் பயன்படுத்தி நாடு முழுவதும் பகிரப்படுகிறது.

உதாரணமாக அம்பலங்கொட பிரதேசத்திற்கு நீல நிறத்திலான பக்கட், காலி பிரதேச்திற்கு பச்சை நிற பக்கட் பகிரப்படுவதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.