மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்திய அமைச்சர் மஹிந்தானந்தா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்திய அமைச்சர் மஹிந்தானந்தா!


உள்ளுர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற்று வருவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய கமத்தொழில் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்பை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று இரவு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

ஏற்கனவே உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக அவர் வெளியிட்ட தகவல் விசாரணைக்கு உட்பட்ட நிலையில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இதற்கு முன் கூறியதுபோல மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சதியில் ஈடுபடவில்லை என்றும் ஆனால் விசாரணைக்கு அவர்களே அழைக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இரண்டே வாரங்களில் விசாரணைகள் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், விசாரணைகள் அவசியம் என்றும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.