![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9Js7efryrXx9HaVBcJtpKMAXDq8vwtX7zFrzVNyyiBpiFrOw45ZBs2i1cQ5XuHuK2ZBhUY64liOT8hYwUqKAtkA1cWGBNhAq4LFanlnXqK42y508tlOqj1YN8BwvGNSY36bqukfe0w3o/s320/B39D6F59-C559-4589-B10E-D4B038FC072F.jpeg)
டுபாயிலிருந்து வருகை தந்த ஒருவர் நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவரே நேற்று நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
$ads={1}
இவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவர் ஒருவகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் நாடு திரும்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
$ads={2}
இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் உயிரிழந்தவர் நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.