குவைத்தில் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவர் சாதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குவைத்தில் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவர் சாதனை!


2020 ஆம் கல்வியாண்டுக்கான குவைத் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப் பரீட்சையில் இம்முறை அதி கூடிய புள்ளிகளைப் பெற்று இலங்கை மாணவன் சாதனை படைத்து தனது தாய் நாட்டுக்கும், குவைத் வாழ் இலங்கை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற நீர்கொழும்பு, பலகத்துறையைச் சேர்ந்த அல்-பலாஹ் கல்லூரியின் முன்னாள் மாணவன் A.R. முஹம்மத் ரிஸ்னி, 98.98% புள்ளிகளைப் பெற்று குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.


குவைத் உயர் கல்வி அமைச்சின் கீழ், கடந்த பல தசாப்த காலமாக வழங்கப்பட்டுவரும் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட  இலங்கை மாணவர்கள் சிறப்பான முறையில் சித்தி எய்து தமது கலைமானி, முதுமானி பட்டங்களை முடித்துவிட்டு குவைத்திலும் வெளிநாடுகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.