மேலதிகமாக அரச சிரேஷ்ட சட்டத்தரணியை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலதிகமாக அரச சிரேஷ்ட சட்டத்தரணியை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை!


களுத்துறை, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் ஹோமாகம ஆகிய மேல் நீதிமன்றங்களில் 600 இற்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவைகளில் காணப்படுவதால் மேலதிக அரச சிரேஷ்ட சட்டத்தரணியை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்பொழுது ஒரு அரச சிரேஷ்ட சட்டத்தணி, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளதோடு சட்ட மா அதிபரின் புதிய தீர்மானத்திற்கு அமைய குறித்த 4 மேல் நீதிமன்றங்களுக்கும் மேலும் அரச சிரேஷ்ட சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்ட மா அதிபரின் தொடர்பாளர் அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

நிலுவைகளிலுள்ள வழக்குகளை விசாரணைகளுக்கு உட்படுத்தி தீர்ப்பினை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.