மற்றையவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் ராஜபக்ஷக்கள் மாத்திரம் அரசியல் செய்வது கொடுமை! -ஹிருனிகா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மற்றையவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் ராஜபக்ஷக்கள் மாத்திரம் அரசியல் செய்வது கொடுமை! -ஹிருனிகா


இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியலைச் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது இச்சந்தர்ப்பத்தில் கொடுமை எனவும் தெரிவித்தார்.

மக்களின் மனம் சிதைவடைந்ததன் காரணமாக மக்கள் இந்த அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், இன்று ஒரு கிராமத்திற்கு ஜனாதிபதி சென்றால் கடவுள் வருகிறார் எனக்கூறும் நாடு இது என ஹிருணிகா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை பெய்த காரணம், ஜனாதிபதி நாடு முழுவதும் சென்றமையால் கூட இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மக்கள் இத்தகைய மனநிலையில் இருக்கும் போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இப்போது எஞ்சியிருப்பது கொடுப்பதை எடுத்துக்கொண்டு அடுத்து எதற்காவும் காத்திருப்பதுதான் என அவர் தெரிவித்தார்.

19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம் பெற்றதாக இருக்கும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமாக அரசியலைச் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர் ஒரு சாதாரண அரசியல் வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது  கொடுமை என அவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.