கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு!


சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) ஆகியவற்றின் ஒப்புதல் பெற்ற பின்னரே விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும், எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் விமானநிலையம் மீளதிறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டிருந்தது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.