கொழும்பு நகரில் இணையதளம் மூலம் பெண்கள் விற்கப்படுகின்றனர் - பொலிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நகரில் இணையதளம் மூலம் பெண்கள் விற்கப்படுகின்றனர் - பொலிஸ்


கொழும்பு, ராஜகிரிய ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாக நுகேகொட விசேட குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.


$ads={1}

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இணையத்தளம் மற்றும் வார இறுதி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு பகிரங்கப்படுத்தப்படுகிறது.

அங்கு வரும் நபர்களுக்கு மிகவும் நுட்பமான முறையில் பெண்களை விற்பனை செய்வதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு சில நபர்களினால் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னர் அவர்களை அந்த நிறுவனத்திற்கு அருகில் வரவழைத்து பாதுகாப்பு கமரா பயன்படுத்தி அந்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பின்னர் நிறுவனத்திற்குள் அழைத்து வருவதறகு் நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.