மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்க வேண்டும்! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்க வேண்டும்! -சஜித்

மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (24) உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் மோட்டார் வாகன இறக்குமதிக்கு தடைவிதிப்பதற்கான காரணம் என்னவென்று அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மோட்டார் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மாத்திரம் அன்றி அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் வாகன  இறக்குமதி தடையினை நீக்க முடியாதெனின் அதற்கான தெளிவு படுத்தல்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.