![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzCs1KGkkhVnoJ0aatFgjliNWdtI1Ve3aupEjgdrACAAlq-x1LAc_uJUkdtjVDDKDg3A-Em1rD7N6Yr6CEZDQUUwzVWFemQWCe4GP0t4-AUdWTvCVdnBii4LoY050b9ScXiaRUQKyJyAA/s320/CDFAE9CF-14E1-4C4F-84D8-6F1CACBD1B72.jpeg)
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று காலை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது , அவரிடம் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.